Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவரான ஸ்டாலினுக்கு ஆரத்தி : எங்கே போனது பகுத்தறிவு?

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:09 IST)
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினை வரவேற்க அவரது குடும்பத்தினர் ஆரத்தியுடன் காத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 
இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அவர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரம் சென்றார். 
 
அப்போது, அவரின் சகோதரி செல்வி ஆரத்தி தட்டுடன் அவரை வரவேற்க காத்திருந்தார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு, எங்கே போனது பகுத்தறிவு?, ஊருக்குதான் உபதேசமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
ஸ்டாலினின் துணைவியார் மற்றும் சகோதரி ஆகியோர் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். எனவே, அவர்களின் திருப்திக்காக அதை செய்துள்ளனர். தனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், தனது துணைவியாருக்காக ஸ்டாலின் கோவிலுக்கும் சென்றுள்ளார். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments