Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாப் பிரச்சனைகளுக்கும் உடனடியாகத் தீர்வு : மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (21:12 IST)
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துளார்.


 

 
திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் இரண்டாவது பயனத்தை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கினார்.
 
இதையடுத்து கூடலூரில் அவர் பொது மக்களிடையே பேசிய போது “கூடலூர் பகுதியில் உள்ள விரிவு 17ல் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிவு 17ல் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்.
 
கலைஞரின் மகன் என்ற அடிப்படையில் இந்த உறுதியை அளிக்கிறேன்.ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மாஸ்டர் பிளான் சட்டத்தால் பாதிக்கப்பட்டோர் என அனைத்து பிரச்னைகக்கும் உடனடியாக தீர்வு காணப்படும்.
 
உதகை ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும், உதகையில் மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் உடனடியாக முடிவு எடுக்கப்படும்.
 
தமிழக மக்களின் சோகத்துக்கு தீர்வு காண திமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்” என்று பேசினார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments