Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக மத்திய அரசிடம் மண்டியிட தயாராக உள்ளது: ஸ்டாலினா இப்படி பேசியது?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (16:53 IST)
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இது குறித்து விவாதிக்க நாளை சட்டப்பேரவைக் சிறப்பு கூட்டம் கூடுகிறது. இது குறித்த கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 
 
ஸ்டாலின் கூறியது பின்வருமாறு, மேகதாது விவகாரத்தில் ஏற்கெனவே திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், கண்டனக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். 
 
ஆகவே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை மாலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அரசின் சார்பில் வைக்கப்படக்கூடிய தீர்மானத்தை பொறுத்து நாங்கள் எங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுவோம்.
 
மேலும், கஜா புயல் பற்றியெல்லாம் அதிமுக கவலைப்படுவதாக இல்லை. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்து கொள்ள வேண்டும். அதற்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கு அவர்கள் தொடர்ந்து தயாராகி கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments