Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலின் விலக வேண்டும்..! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

Senthil Velan
சனி, 22 ஜூன் 2024 (11:41 IST)
போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் முதல்வர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என கூறி சட்டசபையில் இருந்து அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் போதை பொருள் விவகாரத்தில் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள், இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போயுள்ளதை மெய்ப்பிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள்- இவை தான் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.

ALSO READ: கள்ளச்சாராய மரணம்.! சிபிஐ விசாரணை தேவை..! அதிமுக வெளிநடப்பு..!!
 
இனியும் இதே மெத்தனத்தில் இந்த விடியா அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும் என்றும் போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல்  ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments