Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பயணம் உடலுக்கு மட்டுமே நல்லது; தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை - சீமான்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:32 IST)
மு.க.ஸ்டாலின் நடை பயணம் உடலுக்கு மட்டுமே நல்லது;  தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்று நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
 

 
கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான் கோர்ட்டில் ஆஜரானார். பிறகு நீதிபதி சந்திரன் வழக்கை வருகிற 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
பிறகு நிருபர்களிடம் சீமான் கூறும்போது, ”வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. திமுக மற்றும் அதிமுகவிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதே எங்களின் முதல் வேலை.
 
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல், முறைகேடு அதிகரித்து விட்டது. தேசிய கட்சி தேவை இல்லை காமராஜர் ஆட்சிதான் தமிழகத்தில் ஊழல் இல்லாத காலமாக இருந்துள்ளது.
 
மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று நடந்து வருவது அவரின் உடலுக்கு மட்டுமே நல்லது. தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments