Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை வெளிவரும்னு பயந்து தான் ஸ்டாலின் ஓடினார் - முதல்வர் பழனிசாமி

Webdunia
வியாழன், 31 மே 2018 (13:26 IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் பங்கு வெளியே தெரிந்துவிடும் என்பதால் தான், ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளியேறினார் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்திற்கு, அதிமுக தான் காரணம் என ஸ்டாலின் தெரிவித்து வந்த நிலையில், தமிழக சட்டசபையில் துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறி ஸ்டாலின் வெளிநடப்பு செய்து தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடத்தி வருகிறார்,
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிசாமி, 2010-ல், ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக  இருந்தபோது தான், ரூ.1500 கோடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
எல்லாம் செய்துவிட்டு ஸ்டாலின் இப்பொழுது அதிமுக மேல் பழிபோடுவது மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார். இந்த மாதிரியான கேள்வி எழுப்பப்பட்டு உண்மை வெளிவந்து விடும் என்பதற்கு பயந்து தான் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார் என முதலமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments