Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சத்தை எப்போது தருவீங்க மோடி: ஸ்டாலின் அதிரடி கேள்வி!

15 லட்சத்தை எப்போது தருவீங்க மோடி: ஸ்டாலின் அதிரடி கேள்வி!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (13:21 IST)
இந்திய பிரதமர் மோடி 500, 1000 நோட்டுகள் இன்று முதல் செல்லாது எனவும் அதனை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என நேற்று இரவு அறிவித்தார். பிரதமர் அறிவித்த அடுத்த நிமிடமே நாட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


 
 
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பிரதமர் மோடியின் இந்த  நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறும் பிரதமர் மோடி பொது மக்கள் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வார் என கேள்வி எழுப்பினார்.
 
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தனது தேர்தல் பரப்புரையின் போது கருப்பு பணத்தை ஒழித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments