Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவை தடுக்கும் ஸ்டாலின்.. பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:23 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி தானும் குடித்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டெங்குவை தடுக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் வரும் உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கிய அவர், தானும் கசாயத்தை பருகினார். மேலும்” டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த தமிழக அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும், திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனவும் முக ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments