Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் வைகோ தான்”..ஸ்டாலின் புகழாரம்

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (11:10 IST)
பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடைபெறும் மதிமுக மாநாட்டில், மு.க.ஸ்டாலின் வைகோவை திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் என புகழ்ந்து கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ராமசாமியின் வழித்தோன்றலாக கருதப்படுபவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தின் திராவிட அரசியலின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். பிறகு மாநாட்டில் பேசிய ஸ்டாலின், ”திராவிட இயக்கத்தி நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதே போல் திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் வைகோ தான்” என புகழந்து கூறியுள்ளார். மேலும் நீர் அடித்து நீர் விலகுவது போல் நாம் ஒன்றாகி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments