எடப்பாடியின் ஊழல் பாலம் உடையும்: ஸ்டாலின் ட்விட்!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (15:45 IST)
நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளது. இதனால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது. 
 
இந்நிலையில் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் போட்டுள்ளார். அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
 
கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அதிமுக ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்றும், விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும் எனவும் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

நாமக்கல் சிறுநீரக முறைகேடு: சட்டமன்றத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

மயக்க மருந்து கொடுத்து மனைவியை கொலை செய்த டாக்டர்.. 6 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

ரிசார்ட்டில் நடந்த 'ரேவ் பார்ட்டி’.. 14 பெண்கள் உள்பட 50 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments