Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினின் டெல்லி பயணம்: முக்கிய விஷயத்தை சொன்ன அமைச்சர்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (12:46 IST)
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் வரும் 16 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வராக பதவியேற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமர்களை சந்திப்பது இந்திய அரசியலில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.
 
திமுக ஒன்றிய அரசான பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போது தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments