Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்ஆர்பி கட்டுமான நிறுவனம் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் புகார்

ஆர்ஆர்பி கட்டுமான நிறுவனம் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் புகார்
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:43 IST)
சென்னை கூடுவாஞ்சேரியில் தனது இடத்தை அபகரித்துக் கொண்டதாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மீது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப் பிரிவு அலுவலகத்தில் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி புகார் அளித்துள்ளார்.


 
 
சென்னை கூடுவாஞ்சேரி அருகே தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, ஆர்.ஆர்.பி. என்ற பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் அபகரித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் என்று நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி கூறினார்.
 
இந்நிலையில், அந்த இடத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுக் கொண்டு வருகிறார். அவர்களுக்கு விரைவில் வீடு கட்டித் தரப்படும் என்று பத்மநாபன் உறுதியளித்துள்ளார். 
 
வீடு கட்டுவதற்காக ஏராளமானவருக்கு வங்கிகள் அளித்த கடனுதவியை, பத்மநாபன் அபகரித்துக் கொண்டு அவர்களை ஏமாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து ஆர்.ஆர்.பி. என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுபற்றி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil