Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை கடலில் தள்ளிய இலங்கை கடற்படை.. நடுக்கடலில் நடந்த அட்டூழியம்..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (14:33 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கடலில் தள்ளியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடைப்படையினர் தாக்கி வருகின்றனர் என்பதும் கைது செய்து வருகின்றனர் என்பதும் தொடர்கதையாக உள்ளது. இலங்கை கடற்படையினர் ஏராளமான தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர் என்பது அது மட்டும் இன்றி இலங்கை கடற்படையினர்களின் ப்பாக்கி சூட்டுக்கு பல தமிழக மீனவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். 
 
11 மீனவர்கள் படகில் இருந்த நிலையில் 7 பேரை கடலில் தள்ளியதாகவும் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி வலைகளையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மீனவர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments