Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:57 IST)
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்ததால் தமிழக மீனவர்கள் நிம்மதியில் இருந்தனர். ஆனால் அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இலங்கை கடற்படை நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரைதிரும்பினர்
 
அதுமட்டுமின்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரைதிரும்பியதாகவும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments