Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (12:44 IST)
கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதியன்று வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை பிப்ரவரி 21 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றுடன் சிறை தண்டனை முடிவடையும் நிலையில் காவலை நீடிக்காமல் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!