Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையும் நீதியும் வெல்லும்: மனைவி பிரமிளாவின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்...!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (19:20 IST)
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிலா குற்றம் சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார். 
 
என்னையும் ஆட்டிசம் பாதித்த எனது மகனையும் கைவிட்டுவிட்டு எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை வேறு சிலருக்கு மாற்றிவிட்டார் என ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா குற்றம் காட்டி இருந்தார்
 
இந்த  குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு என் மனைவி என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றும் நான் என் மனைவி மகனை நிதி தொடர்பாக ஏமாற்றவில்லை என்றும் எப்போதும் அவர்களை ஆதரித்தே வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய அமெரிக்க சம்பளம் என் வீடு எல்லாமே அவரிடம் தான் உள்ளது என்றும் அவர் நடத்தி வரும் அமைப்பு இப்போதும் ஜோஹோவின் ஆதரவில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
நான் வாழும் நாட்கள் வரை அவை தொடரும் என்றும் இந்த குழப்பம் யாவும் குடும்ப பகை காரணமாக என் சித்தப்பாவால் ஏற்படுத்துகிறது என்றும் உண்மையையும் நீதியும் வெல்லும் என இப்போதும் நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments