Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் தமிழகம் வந்தனர்

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் தமிழகம் வந்தனர்
, வெள்ளி, 21 நவம்பர் 2014 (08:22 IST)
டெல்லியிலிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்த, மீனவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
 
போதைப் பொருள் கடத்தியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் இலங்கை அரசு விடுவித்ததை அடுத்து அவர்கள் டெல்லி வந்தனர்.
 
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்தனர். மீனவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் பி.வளர்மதி, சுந்தர்ராஜ், கே.ஏ. ஜெயபால், மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஆகியோர் வரவேற்றனர்.
 
இந்நிலையில் அவர்கள் இன்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்திப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil