Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

Mahendran
திங்கள், 6 ஜனவரி 2025 (17:38 IST)
கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் குஜராத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கும் HMPV  வைரஸ் தொற்று பாதித்த நிலையில், தற்போது சென்னையிலும் இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் HMPV  என்ற வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து சென்னையிலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV  வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் மூன்று குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு HMPV  வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments