Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருப்புக்கோட்டை எஸ்பிகே அலுவலகத்திற்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (19:35 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ரு.170 கோடி ரொக்கமும், 100 கிலோவுக்கும் அதிகமாக தங்கமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்த நிலையில் கடந்த 5 நாட்கள் நடந்த சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் எஸ்பிகே அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 
முன்னதாக அருப்புக்கொட்டை எஸ்பிகே நிறுவனத்தில் ஒரு தலைமை அதிகாரி, 2 துணை அதிகாரிகள், 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் தொடர் சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ஒரு கிமீ தூரம் சாலை அமைக்க ரூ18 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை கான்ட்ராக்டர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் செய்யாதுரையின் நிறுவனம் ஒரு கிமீ சாலை அமைக்க ரூ35 லட்சம் முதல் ரூ36 லட்சம் வரை டெண்டர் எடுத்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments