Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு... கைதான மாணவி சப்தமிட்டு அழுததால் பரபரப்பு ...

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (16:05 IST)
இந்தியாவை உலுக்கி எடுத்துள்ளது  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ள விவகாரம் தான். இந்நிலையில் இந்த ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரில் படித்தது தொடர்பான வழக்கில் மாணவன் உதித்சூர்யா இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் காஞ்சிபுரம் சவிதா மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேனி சிபிசிஐடி போலீஸார், வழக்கறிஞரின்  மகளான அம்மாணவியை கைது செய்து தேனி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அம்மாணவி திடீரென அழத்தொடங்கினா. அதனால் அங்கி பரபரப்பு ஏற்பட்டது.  இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments