Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (10:39 IST)
குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகளுக்காக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகளுக்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் காச நோய், கல்லீரல் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான், இருமல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 11 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத பெற்றோர், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி எந்த தடுப்பூசியை செலுத்தவில்லையோ, அந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்திக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியுள்ளார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!

மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அன்புமணி மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும்! சூசகமாக சொன்ன ராமதாஸ்!

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments