Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (10:39 IST)
குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்ற நிலையில், தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகளுக்காக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகளுக்காக டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் காச நோய், கல்லீரல் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான், இருமல், நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 11 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத பெற்றோர், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி எந்த தடுப்பூசியை செலுத்தவில்லையோ, அந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்திக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியுள்ளார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments