Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:46 IST)
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா, 2014 ஆகஸ்டு 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, மும்பை சி.எஸ்.டி., மும்பை லோக்மான்ய திலக், மும்பை பேந்த்ரா, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
 
திருநெல்வேலியிலிருந்து ஆகஸ்டு 28ஆம் தேதி இரவு 8.50க்குப் புறப்படும் சிறப்பு ரயில், வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்குச் சென்றடையும். 
 
மறு மார்க்கத்தில் ஆகஸ்டு 29ஆம் தேதி மாலை நாலே முக்காலுக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் இத்ந ரயில்,  மறுநாள் காலை 4 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும்.
 
திருவனந்தபுரத்திலிருந்து ஆகஸ்டு 27ஆம் தேதி மாலை மூன்றரை மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.45  மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
 
மறு மார்க்கத்தில் ஆகஸ்டு 28ஆம் தேதி, 12.45க்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 2.45க்குத் திருவனந்தபுரம் சென்றடையும்.
 

Share this Story:

Follow Webdunia tamil