Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்: 2 முன்பதிவில்லா ரயில் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (07:29 IST)
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக இரண்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நான்கு நாள் விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் சேர்ந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு சென்னை திரும்ப பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்று காலை முதல் இரவு வரை சொந்த ஊரிலிருந்து புறப்படும் பொதுமக்கள் நாளை காலை சென்னை வந்தடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றுள்ளனர். தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நவம்பர் 3ஆம் தேதி மதுரை மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இன்று மாலை 7:15 மணிக்கு மதுரையில் இருந்தும், இரவு 10:50 மணிக்கு திருச்சியில் இருந்தும் முன்பதிவில்லா  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த ரயிலை சென்னை திரும்பும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments