Webdunia - Bharat's app for daily news and videos

Install App

North Madras-ல் இறங்கிய அதிரடிப்படை: கறார் காட்டும் அரசு!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (12:08 IST)
சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் 2,000-த்துக்கும் மேலாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
குறிப்பாக சென்னையில் உள்ள 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1,000-த்தை கடந்துள்ளது. வடசென்னை பகுதிகளில் பாதிப்பு குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதையடுத்து சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 
 
ஆனால் அதனையும் மீறி பலர் சிலர் பாதுகாப்பு இல்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். எனவே நிலையை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி படை  மூலம் கூடுதல் காவல்படையை களமிறங்கி உள்ளனர். இவர்கள் குறிப்பாக வடசென்னையை கட்டுக்குள் வைப்பார்கள் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments