இன்று, நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Mahendran
சனி, 16 நவம்பர் 2024 (09:36 IST)
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதை அடுத்து, வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது. 
 
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும் நாளையும், அதாவது நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், இடம் மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் சென்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments