சபாநாயகர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாற்றியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “திமுகவினரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவைத் தலைவர் செயல்படுகிறார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சி தொடர்பான பதிலுரையில் அமைச்சர் உதயகுமார் தவறான தகவல்களை அளிக்கிறார்.
அதற்கு கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவைத் தலைவர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார்“ என்று அவர் குற்றம் சாற்றினார்.