Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வெளியிட்டது போலி அறிக்கை.. விரைவில் உண்மை அறிக்கை! – எஸ்.பி.வேலுமணி!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (09:26 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்டமாக அறிக்கைகளை தயார் செய்து வருகின்றன. அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண்கள் வேலைவாய்ப்பு, பெட்ரோல் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி.வேலுமணி “தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலைதான் வீசுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவரே வென்று முதல்வராக பதவி ஏற்பார். திமுக சாத்தியமில்லாத பொய்யான அறிக்கைகளை மக்களுக்கு வழங்குகிறது. உண்மையான தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments