Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புறநகர் ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:04 IST)
சென்னை புறநகர் ரயில்களில் மீண்டும் சுற்றுலா பயணச்சீட்டுகள் வழங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டத்தில் செயல்படும் புறநகர் ரயில்களில் விருப்பம்போல பயணிக்கும் சுற்றுலா பயணச்சீட்டுகள் முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில் சில காலம் முன்னதாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த பயணச்சீட்டு திட்டம் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் திருவள்ளூர் – சென்னை, எம்ஜிஆர் செண்ட்ரல் – கும்மிடிபூண்டி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களில் விருப்பம்போல பயணிக்க முடியும். இந்த பயணச்சீட்டுகளை ஒரு நாள், மூன்று நாட்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆகிய மூன்று வகைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments