Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்! - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

Prasanth Karthick
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (16:16 IST)

தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் இளைஞர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு எனது ஆட்சியின்போது அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினேன். நீங்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை குறைத்தீர்கள்.

 

முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை நான் அமல்படுத்தி இருந்தேன். தற்போது அந்த சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்.

 

தேசிய அளவில் கறுவுறுதல் வீதம் 2.1 ஆக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் 1.6 சதவீதம் மட்டுமே கறுவுறுதல் நடைபெறுகிறது. இப்படியே சென்றால் 2047ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். தென்னிந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுவதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments