Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்! - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

Prasanth Karthick
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (16:16 IST)

தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் இளைஞர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு எனது ஆட்சியின்போது அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினேன். நீங்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை குறைத்தீர்கள்.

 

முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை நான் அமல்படுத்தி இருந்தேன். தற்போது அந்த சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்.

 

தேசிய அளவில் கறுவுறுதல் வீதம் 2.1 ஆக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் 1.6 சதவீதம் மட்டுமே கறுவுறுதல் நடைபெறுகிறது. இப்படியே சென்றால் 2047ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். தென்னிந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுவதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments