Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (12:09 IST)
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன்  அறிவுறுத்தளின்படி, மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ராஜா மாறன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் முகமது தாரிக், இந்து மகா சபா தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில், பேசியவர்கள் கூறியதாவது: 
 
திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், சிறு, குரு தொழில் செய்பவர்கள் மிகுந்த தொழில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ,பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது .
 
கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
 
பொதுமக்கள் வீதிகளில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என்றும்,குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments