Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் வந்த 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நிறுத்தம்: காவல்துறை அதிரடி..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (08:15 IST)
தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 145-க்கும் மேற்பட்ட ஆம்னி  பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என்றும் ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே  கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

 சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்றும் அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள்  கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து இயக்க முயற்சி செய்த நிலையில் அந்த பேருந்துகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தென் மாவட்டத்திலிருந்து வந்த அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments