Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதிமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் திடீர் விலகல்

மதிமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் திடீர் விலகல்
, புதன், 18 மே 2016 (18:48 IST)
மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறன் இன்று திடீரென மதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


 

 
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். வைகோவின் தீவிர ஆதரவாளர். இவர் திடீரென மதிமுகவிலிருந்து விலகுவதாக, வைகோவிடம் கடிதம் கொடுத்துள்ளார் என்றும் விரைவில் அவர் திமுகவில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
இதுபற்றி மணிமாறன் கூறுகையில் “மதிமுகவிலிருந்து விலகியது உண்மைதான். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் மாவட்டமாக தென் சென்னையை வைத்திருந்தேன். கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டேன். ஆனால், என் வேலைக்கு மதிமுகவில் எந்த மரியாதையும் இல்லை. எங்களை வைகோ தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார்.
 
வேளச்சேரியில் என்னை போட்டியிடச் சென்னார் வைகோ. ஆனால் நான் மறுத்துவிட்டேன். 
 
மக்கள் நலக் கூட்டணி உருவாகியதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கூட்டணி வெற்றி பெறாது. இது வைகோவிற்கு தெரியவில்லை. தவறான  முடிவெடுத்து தொண்டர்களை பலியாக்கிவிட்டார். அவருக்கு 150 சவரனில் தங்க வாள் கொடுத்தேன். 
 
வைகோவை எனது சொந்த தந்தையாக நினைத்தேன். ஆனால் அவரிடம் எந்த கொள்கையும் இல்லை. தவறான முடிவுகளையே அவர் எப்போதும் எடுக்கிறார். கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றிவிட்டார். 
 
அதைவிட விஜயகாந்த் என் தலைவர் என்று அவர் பேசியதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே மதிமுகவிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
 
விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2016 சட்டமன்ற தேர்தல் முடிவு - பல்லடம் தொகுதி