Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் இனி பயணிகள் சார்ட் ஒட்டப்படாது; ரயில்வே துறை அதிரடி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:00 IST)
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி விரைவு ரயில்களில் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது என ரயில்வே வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
புது டெல்லி, மும்பை செண்ட்ரல் உட்பட 6 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட உள்ளது.
 
முதலில் இதை சோதனை ஓட்டமாக 3 மாதங்களுக்கு பரிசோதனை முறையில் செய்ய உள்ளனர். பின் அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சார்ட் ஒட்டும் பணியால் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் செலவிடுகிறது. 
 
ஏற்கனவே பெங்களூர் மற்றும் யஷ்வந்த்புர் ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதன்பிறகே தெற்கு ரயில்வே துறை பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்த முடிவு செய்தது.
 
மேலும், ரயில்களில் ஒவ்வொரு பெட்டிகளிலும் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதற்கு மாறாக ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஒட்டுமொத்த பயணிகளும் சார்ட் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments