Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் இனி பயணிகள் சார்ட் ஒட்டப்படாது; ரயில்வே துறை அதிரடி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:00 IST)
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி விரைவு ரயில்களில் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது என ரயில்வே வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
புது டெல்லி, மும்பை செண்ட்ரல் உட்பட 6 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட உள்ளது.
 
முதலில் இதை சோதனை ஓட்டமாக 3 மாதங்களுக்கு பரிசோதனை முறையில் செய்ய உள்ளனர். பின் அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சார்ட் ஒட்டும் பணியால் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் செலவிடுகிறது. 
 
ஏற்கனவே பெங்களூர் மற்றும் யஷ்வந்த்புர் ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதன்பிறகே தெற்கு ரயில்வே துறை பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்த முடிவு செய்தது.
 
மேலும், ரயில்களில் ஒவ்வொரு பெட்டிகளிலும் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதற்கு மாறாக ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஒட்டுமொத்த பயணிகளும் சார்ட் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments