குடித்துவிட்டு வந்து தன் தாயை திட்டியதாலும், அடித்ததாலும் ஆத்திரமடைந்த மகன்கள் தன் தந்தைய உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருக்கு சதீஷ், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் மனைவி லட்சுமியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடிப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த மாரியப்பன் தன் மனைவியை அடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் தட்டிக்கேட்டனர். ஆனாலும் அவர் தாயை அடிப்பதை நிறுத்தாததால் அருகில் இருந்த உருட்டு கட்டையால் தந்தையை தாக்கினர்.
சரமாரியாக அவர்கள் தாக்கியதில் மாரியப்பனின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மகன்கள் சதீஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.