Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயம் வருகிறார் சோனியா காந்தி! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (20:36 IST)
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தாயாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வரும் நவம்பர் 15ஆம் தேதி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் நவம்பர் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 15ஆம் தேதி சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெறும் என்றும் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலையை திறக்க சோனியா காந்தி வருவது உறுதி செய்யப்பட்டால் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments