Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னதான் நடக்குது அங்க? – கே.எஸ்.அழகிரியை அழைத்த சோனியா காந்தி!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (12:20 IST)
திமுக – தமிழக காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளார் சோனியா காந்தி.

மக்களவையில் கூட்டணி வைத்த திமுக – காங்கிரஸ், தங்களது கூட்டணியை உள்ளாட்சி தேர்தலிலும் நீட்டித்தது. உள்ளாட்சி தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியதில் காங்கிரஸுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுகவிலிருந்து யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இரு கட்சிகளிடையே மனக்கசப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளக்கங்களை கேட்க சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பூசலை சாத்வீகமான முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் சோனியா காந்தி இறங்கியிருப்பதாக தெரிகிறது. கே.எஸ்.அழகிரியுடனான சந்திப்புக்கு பிறகு திமுகவை சோனியா காந்தி தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments