Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்க பணம் தராததால் தாயின் காதை அறுத்து கொலை செய்த மகன்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2015 (17:43 IST)
மது அருந்த பணம் தராததால், நகைக்காக மகன் ஒருவர் தனது தாயின் காதை அறுத்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
 

 
தர்மபுரி மாவட்டம் முக்குலம் ஊராட்சி சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (85). இவர் வாய் பேச இயலாதவர். இவருக்கு ரங்கசாமி என்ற மகன் உள்ளார். ஆனாலும் தனியாக வசித்து வந்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் சின்னம்மாள், காது அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக மர்ம நபர்கள், சின்னம்மாளை கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
 
இது குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், சின்னம்மாளின் மகன் ரங்கசாமி, தாயை கொலை செய்து, அரை பவுன் தோட்டை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
 
இது குறித்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், பல்வேறு இடங்களில் பொருட்களை திருடி அதை விற்றும் மது குடித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், சம்பவத்தன்று குடிக்க பணம் இல்லாததால், தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துவிட, இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, குடிசைக்குள் தூங்கி கொண்டிருந்த சின்னம்மாளின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்தேன்.
 
பின்னர் அவரது காதை கத்தியால் அறுத்து, அரை பவுன் தங்கத்தோட்டை திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து ரங்கசாமியை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

Show comments