Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனின் திருமணத்துக்கு முன் உயிர்நீத்தத் தந்தை – மகன் எடுத்த ஆச்சர்ய முடிவு !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (11:42 IST)
திண்டிவனம் அருகே தனது திடீரெனத் தனது தந்தை இறந்தததால் அவரது சடலத்திடம் ஆசிர்வாதம் வாங்கி மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திண்டிவனத்தைச் சேர்ந்த அலக்சாண்டர் என்பவர் மயிலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அதேப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். இதை இருவீட்டாரிடமும் சொல்லி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் அடுத்தமாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தார். ஆனால் திடீரென்று நேற்று அலக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலக் குறைவார் இறந்துள்ளார்.

தனது தந்தை மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த அலக்சாண்டர் அவரது ஆசிர்வாத்தோடுதான் தன் திருமணம் நடக்க வேண்டுமென்று நினைத்திருந்தார். ஆனால் எதிர்பாராத இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் தனது உறவினர்களையும் ஜெகதீஸ்வரியின் வீட்டாரையும் அழைத்து உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க தெய்வமணியின்  உடலுக்கு முன்னர் ஜெகதீஸ்வரிக்குத் தாலி கட்டியுள்ளார் அலக்சாண்டர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments