Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்பு பணிகள் எதிரொலி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் ரத்து

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (07:00 IST)
பராமரிப்பு பணிகள் எதிரொலி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் ரத்து
திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் என்று சில ரயில்கள் பகுதியாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
 
* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 06063) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதியும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதியும், தாம்பரம்-நாகர்கோவில் (06065) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28, 29-ந்தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29, 30-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.
 
 
* அதேபோல், குருவாயூர்-எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை எழும்பூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
* எழும்பூர்-நெல்லை (02631) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மதுரை-நெல்லை இடையிலும், நெல்லை-எழும்பூர் (02632) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நெல்லை-மதுரையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
* எழும்பூர்-செங்கோட்டை (06181) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை இடையிலும், செங்கோட்டை-எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை செங்கோட்டை-மானாமதுரை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments