கோவையில் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:30 IST)
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கோவையில் சற்று அதிகரித்து வருவதையடுத்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது 
 
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள் சனி ஞாயிறு இயங்க தடை என்றும், பூங்காக்கள் மற்றும் மால்கள் சனி ஞாயிறு அன்று மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்றும் இரவு 8 மணிக்கே வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.மேலும் கோவையில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் வழங்கலாம் என்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் சுழற்சி முறையில் இயங்க அனுமதி என்றும் உழவர் சந்தை தவிர பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்பட அனைத்து சந்தைகளும் இயங்க தடை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸப் இல்லைன்னா.. அரட்டை யூஸ் பண்ணுங்க! இதுக்கெல்லாம் வழக்கா? - உச்சநீதிமன்றம் அதிரடி!

நாட்டை விட்டு ஓடிய அதிபர்! மடகாஸ்கர் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்! - Gen Z புரட்சியால் வந்த வினை!

சொந்த மக்களை சுட்டுக் கொல்லும் ஹமாஸ் குழு! இஸ்ரேல் படை வெளியேறியதும் புதிய பிரச்சினை?

ஒரு பெரிய கட்சி என்.டி.ஏ கூட்டணிக்கு வருகிறது.. விஜய்யை மறைமுகமாக சொன்னாரா வானதி சீனிவாசன்?

4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம்! எச்சரிக்கைக்கு பிறகு கட்டணம் குறைப்பு! - எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments