Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலர்களுடன் குழந்தைக்கு பாலியல் தொல்லை : தாய் கைது

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (12:00 IST)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் பெட்ரோல் பங்க் ஊழியராக உள்ளார். இவருக்கு மனைவியும் (23) மூன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். 
கடந்த 14 ஆம் தேதி இவரது மனைவி குழந்தையுடன் காணால் போனார். இதுகுறித்து கணவர் போலீஸுல் புகார் தெரிவிக்க காவக்துறை வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தாய் தன் மகளுடன் வீட்டிற்கு வந்தார். இது பற்றி போலீஸார் விசாரித்ததில் பல பகீர் விஷயங்கள் வெளியானது.
 
அதில், அப்பெண்ணிற்கு ஆந்திர மாநிலத்தில்  பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா, மணி ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் அவர்களுடன் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளார். அத்துடன் தன்  3 1/2 அரை வயது பெண்குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
இதனையடுத்து குழந்தைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்தனர்.
 
தற்போது கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தாயையும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவா, மணி ஆகியோரை  போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்