Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் குறித்து அவதூறு..! சென்னையில் பாஜக முக்கிய பிரமுகர் கைது..!!

Senthil Velan
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:22 IST)
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் விதமாக இழிவாக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் இன்று காலை பெரவள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஒன்றாம் தேதி பாஜக சார்பில் பெரவள்ளூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கபிலன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ: கர்நாடக அரசிடம் திமுக பணம் வாங்கிவிட்டதா என சந்தேகம்.! துரைமுருகனுக்கு அண்ணாமலை பதிலடி..!!
 
இந்நிலையில் இன்று காலை சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கபிலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments