Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதமி அளித்த நில மோசடி புகார்: தலைமறைவாக இருந்த 6 பேர் கேரளாவில் கைது!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (17:38 IST)
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த ஆறு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகை கௌதமி, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அழகப்பன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பன் அவரது மனைவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நாளை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் தலைமறைவாக இருந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments