சென்னை சிவன் கோவில்களில் விடிய விடிய சிவராத்திரி கொண்டாட்டம்.. அதிகாலை வரை சிறப்பு பூஜைகள்..!

Mahendran
சனி, 9 மார்ச் 2024 (08:17 IST)
நேற்று மகா சிவராத்திரி திருவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாகவும் ஏராளமான சிவ பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டும் ஒரே நாளில் வந்ததை அடுத்து ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பாக சிவராத்திரி திருவிழாவை பக்தர்கள் விடிய விடிய கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த நிலையில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு நேற்று இரவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது என்றும் சென்னையில் நேற்று கூடுதல் பேருந்துகள் விடிய விடிய இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் மட்டுமின்றி புறநகரிலும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....

புதுச்சேரி, கேரளா, அசாமில் சட்டமன்ற தேர்தல் நிறைவு!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?..,

10 பெட்டாபைட் அளவிலான ராணுவ ரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்.. அனைத்தும் கிரிப்டோகரன்சிக்கு விற்பனை..!

10 ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கு.. மகாபாரத போர் என நீதிபதிகள் விமர்சனம்.. ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..!

புதுச்சேரியில் 86.92% வாக்குப்பதிவு.. இளைஞர்கள் எல்லோரும் விசிலுக்கு குத்திட்டாங்களோ?

அடுத்த கட்டுரையில்
Show comments