சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; 3 மாடி கட்டிடம் சரிந்தது!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (08:44 IST)
சிவகாசியில் பட்டாசு குழாய் தயாரித்து வந்த வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள 3 அடுக்கு மாடி வீடு ஒன்றை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் பட்டாசு மூலப்பொருளான ரசாயன குழாய்கள் தயாரிக்கும் பணியை இவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாயமான இரு பெண்களை தேடும் பணி தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments