Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு.. தேர்தல் பிரச்சாரம் செய்வாரா?

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:08 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னர் ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய வகையில் திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டதாக திமுக தலைமை தெரிவித்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்ற கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது காரசாரமான பேச்சை மீண்டும் தொடர்வாரா? தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அநாகரிகமாக பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்து தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments