Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்த சிவாஜி குடும்பம்

சிவாஜி  கணேசனுக்கு மணி மண்டபம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்த சிவாஜி குடும்பம்
, புதன், 2 செப்டம்பர் 2015 (04:24 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர்.
 

 
சென்னை, அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்ட சபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்த அறிவிப்பை, கடந்த சில நாட்களுக்கும் முன்பு, தமிழக சட்ட சபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் இடம் மற்றும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, திரையுலகைச் சேர்ந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும்  நேரில் சென்று நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil