சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:02 IST)
சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் சரஸ்வதி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி இருந்தது. இந்த நிலையில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அதிமுக திமுக வேட்பாளர்கள் சமமாக வாக்குகளை பெற்று இருந்ததால் குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது
 
குலுக்கல் முறையிலான வெற்றிக்கு இருதரப்பிலும் ஒப்புக் கொண்டதை அடுத்து குலுக்கல் செய்யப்பட்டதில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
அதிமுக வேட்பாளராக 8வது வார்டு உறுப்பினராக சரஸ்வதி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குலுக்கல் முறையில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் சோகத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments