Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷம் குடித்து உயிரிழந்தார் அதிமுக தொண்டர்

விஷம் குடித்து உயிரிழந்தார் அதிமுக தொண்டர்
, ஞாயிறு, 28 செப்டம்பர் 2014 (14:44 IST)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
 
சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் திருநகரைச் சேர்ந்த 70வயதுடைய சுப்பிரமணியன், இவர் அரசு பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
 
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை எனத் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து விரக்தி அடைந்த சுப்பிரமணியன் வீட்டிலிருந்த பூச்சிமருந்தை குடித்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சிகிச்கைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil