Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (07:35 IST)
சிவகங்கை உள்ளிட்ட நான்கு நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  
 
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
இமானுவேல் சேகரனை நினைவு தினத்தை ஒட்டி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments